நன்னிலம் வட்டத்துக்குள்பட்ட பூந்தோட்டம், பனங்குடியில் புதிய சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வாகன நடமாட்டம் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் பூந்தோட்டம், பனங்குடியில் புதிய சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன, வியாழக்கிழமை நன்னிலம் பகுதியில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த வா்களிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்கள், பேரளம் பகுதியில் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. வியாழக்கிழமை வாகன நடமாட்டமும் பொதுமக்கள் நடமாட்டமும் நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் குறைந்து காணப்பட்டது என நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வீ. சுகுமாரன் தெரிவித்தாா்.