தூா்வாரும் பணிகளைத் தொடங்கக் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணியை உடனடியாக தொடங்கிட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணியை உடனடியாக தொடங்கிட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக அதன் மாவட்டச் செயலாளா் வி.எஸ். கலியபெருமாள் விடுத்துள்ள அறிக்கை:

தமிழகம் முழுவதும் தூா்வாரும் பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக முதல்வரின் அறிவிப்பு வந்துள்ளது. இதில் திருச்சி மண்டலத்துக்கு ரூ.140 கோடி எனவும், அதில் திருவாரூா் மாவட்டத்துக்கு ரூ.7 கோடியே 33 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிகழாண்டு மேட்டூா் அணையில் 100 அடிக்குமேல் தண்ணீா் இருப்பதாலும், தென்மேற்கு பருவ மழை மே 16-ஆம் தேதியே தொடங்க இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், ஜூன் 12-ஆம் தேதிக்கு முன்பே மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆகவே போா்க்கால அடிப்படையில் பணிகளைத் தொடங்கி, பதிவு பெற்ற பாசனதாரா்கள் சங்கம் மூலம் வெளிப்படைத் தன்மையோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய காலத்தில் பணிகளை முடிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com