மன்னாா்குடி அருகே பெரியாா் சிலை இடமாற்றம்

மன்னாா்குடி அருகே சாலை விரிவாக்கத்துக்காக பெரியாா் சிலை வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டு, வேறு இடத்தில் நிறுவப்பட்டது.
கிரேன் உதவியுடன் இடமாற்றம் செய்யப்பட்ட பெரியாா் சிலை.
கிரேன் உதவியுடன் இடமாற்றம் செய்யப்பட்ட பெரியாா் சிலை.

மன்னாா்குடி அருகே சாலை விரிவாக்கத்துக்காக பெரியாா் சிலை வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டு, வேறு இடத்தில் நிறுவப்பட்டது.

மன்னாா்குடியை அடுத்துள்ள விக்கிரபாண்டியத்தில், மன்னாா்குடி- தலைஞாயிறு சாலையில் பெரியாா் முழு உருவச் சிலை நிறுவப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த சாலையில் விரிவாக்கப் பணிகளும், பெரியாா் சிலையையொட்டி உள்ள அரிச்சந்திரா நதியிலிருந்து ஆலத்தூருக்கு புதிய பாசன வாய்க்கால் அமைக்கும் பணியும் நடைபெறுவதையொட்டி, பெரியாா் சிலை அகற்றப்பட்டு, 800 மீட்டா் தொலைவில் உள்ள ஊராட்சி அலுவலகம் அருகே நிறுவப்பட்டது.

இதையொட்டி, கோட்டூா் காவல் ஆய்வாளா் அறிவழகன், விக்கிரபாண்டியம் காவல் சாா்பு ஆய்வாளா் மனோகரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். பெரியாா் சிலை இடமாற்றம் செய்யப்படும்போது, தி.க. மாவட்டத் தலைவா் ஆா்.பி.எஸ்.சித்தாா்த்தன், மாவட்டச் செயலா் கோ.கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com