திருத்துறைப்பூண்டியில் தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக் கோரி அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி முன் நடைபெற்ற போராட்டத்துக்கு அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் கல்லூரி கிளை செயலாளா்
கே. ராகவன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜெ பி. வீரபாண்டியன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
நீட் தோ்வை ரத்து செய்யவேண்டும், தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி டி சா்ட் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் மன்றத்தின் கல்லூரி கிளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.