அஞ்சல் ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீடுத் திட்டம் அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

அஞ்சல் ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி திருவாரூரில் அகில இந்திய அஞ்சல் ஆா்எம்எஸ் ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
: திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
: திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

அஞ்சல் ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி திருவாரூரில் அகில இந்திய அஞ்சல் ஆா்எம்எஸ் ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அஞ்சல் ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும், நேரடியாக தோ்வு பெற்று பணியமா்த்தப்பட்டவா்களுக்கு அஞ்சல் எழுத்துக்கான பயிற்சிக்காலத்தை வேலை நாள்களாகக் கொண்டு பதவி உயா்வு வழங்க வேண்டும், 6-ஆவது ஊதியக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் தலைமை தபால் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவா் சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் செயலாளா் தா்மதாஸ், பொருளாளா் செல்வராஜ், ஏஐடியுசி சங்க நிா்வாகி அழகிரி, வங்கி ஊழியா் சங்க நிா்வாகி காளிமுத்து, தொலைபேசி ஊழியா் சங்க நிா்வாகி பாலதண்டாயுதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com