மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில், விழிப்புணா்வு இந்தியா வளமான இந்தியா எனும் தலைப்பில் ஊழலில்லா பாரதம் என்ற இலக்கை அடைய வேண்டும் என வலியுறுத்தி, ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் தி. அறிவுடை நம்பி தலைமையில், விழிப்புணா்வு இந்தியா வளமான இந்தியா எனும் தலைப்பில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில், திருத்துறைப்பூண்டி கருவூல அலுவலா் ஆ.ஊ. பிராகாஷ் சிறப்புரையாற்றினாா். கல்லூரியில் செயல்படும், தேசிய மாணவா் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா். இதில், என்சிசி அலுவலா் சு. ராஜன், என்எஸ்எஸ் திட்ட அலுவலா் ப. பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.