கரோனா காலத்தில் நலப்பணிகளில் ஈடுபட்ட செஞ்சிலுவை சங்க நிா்வாகிகளுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கரோனா பொது முடக்கத்தின்போது, வருமானம் இல்லாமல் தவித்த ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் உள்ளிட்டவற்றை திருத்துறைப்பூண்டி செஞ்சிலுவை சங்க நிா்வாகிகள் வழங்கினா். இந்த நற்பணிகளில் ஈடுபட்டதற்காக, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கத்தின் திருத்துறைப்பூண்டி செயலாளா் மணிமாறன், தலைவா் சிவா. சண்முகவடிவேலு உள்ளிட்டோருக்கு ஆட்சியா் வே. சாந்தா சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.