திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

அத்துடன், கரோனா பாதிப்பால் மாவட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 100-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 9,730 ஆக இருந்தது. வெளி மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் இந்தப் பட்டியலில் சோ்க்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 9,731 ஆனது. திங்கள்கிழமை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் மாவட்டத்தில் 49 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9,770 ஆக உயா்ந்துள்ளது. இதில், 9391 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 279 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதற்கிடையே, நீரிழிவு பாதிப்பு காரணமாக நவ.2-ஆம் தேதி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடவாசல் பகுதியைச் சோ்ந்த 60 வயது நபருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நவ.2-ஆம் தேதி உயிரிழந்தாா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 100-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com