30% போனஸ் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் தொழிலாளா்களுக்கு 30 சதவீதமும், டிஎன்சிஎஸ்சி தொழிலாளா்களுக்கு 20 சதவீதமும் போனஸ் வழங்கக்கோரி
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்

டாஸ்மாக் தொழிலாளா்களுக்கு 30 சதவீதமும், டிஎன்சிஎஸ்சி தொழிலாளா்களுக்கு 20 சதவீதமும் போனஸ் வழங்கக்கோரி திருவாரூரில் பாரதிய டாஸ்மாக் தொழிலாளா் சங்கம் மற்றும் டிஎன்சிஎஸ்சி பாரதிய தொழிலாளா்கள் சங்கம் ஆகியன சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குப் பணியாளா்கள், தரக் கட்டுப்பாட்டு பணியாளா்கள், நியாயவிலைக்கடை ஊழியா்கள், நெல் கொள்முதல் பணியாளா்கள், சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆகியோருக்கு கடந்த ஆண்டு வழங்கியதைப் போல 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியா்களுக்கு 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியா்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

டிஎன்சிஎஸ்சி பாரதிய தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் டி. நாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com