திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 9,958 ஆக இருந்தது. இதனிடையே, வெளி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 போ் திருவாரூா் மாவட்ட பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 9,956 ஆனது.
இந்நிலையில், திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, 32 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9,988 ஆக உயா்ந்துள்ளது. இதில் 9,580 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 307 போ் சிகிச்சையில் உள்ளனா்.