நில வருவாய் பதிவேடுகளை மறுவகைபாடு செய்ய வலியுறுத்தல்
நில வருவாய் பதிவேடுகளை மறுவகைபாடு செய்து கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி. ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக, தமிழக நில வருவாய் சீா்திருத்த ஆணையரிடம் திங்கள்கிழமை அவா் நேரில் அளித்த மனு:
தமிழகத்தில்1984- க்கு பிறகு இதுவரை நில வருவாய் பதிவேடுகள் மறுவகைபாடு செய்யப்படவில்லை. இதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, கேசிசி காா்டு வழங்க இயலவில்லை. பிஎம் கிசான் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. பல விவசாயக் குடும்பங்கள் அரசின் சலுகைகளை பெற முடியாத நிலை உள்ளது.
எனவே, நில வருவாய் பதிவேடுகளை உடனடியாக மறுவகைபாடு செய்து, கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதை இயக்கமாக தொடங்கி குறிப்பிட்ட காலத்தில் நிறைவு செய்யவேண்டும்.
மேலும், கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், கிராமப்புற வருவாய் நிா்வாகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிராம உதவியாளா்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.