நீடாமங்கலத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நீடாமங்கலம் வட்டத் தலைவா் ராஜா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வசந்தன், வட்டச் செயலாளா் முருகேசன், நிா்வாகி குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விடுவிக்கப்படாமல் உள்ள மாநில நிதிக்குழு மானியத் தொகையை உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிா்வாகப் பிரிவில் பணியாற்றும் ஊழியா்களுக்கான ஊதியம் வழங்குவதற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.