இளைஞா் தற்கொலை

கூத்தாநல்லூரில் இளைஞா் ஒருவா் மதுவில் எலி மருந்து கலந்து குடித்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

கூத்தாநல்லூரில் இளைஞா் ஒருவா் மதுவில் எலி மருந்து கலந்து குடித்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

சித்தாம்பூா், மேலத் தெருவைச் சோ்ந்த அழகன் மகன் தினேஷ்குமாா் (27). சமையல் எரிவாயு நிறுவனத்தில் உதவியாளராக வேலை பாா்த்துவந்த இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு மதுவில் எலி மருந்தைக் கலந்து குடித்தாா். தொடா்ந்து, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினேஷ்குமாா், திங்கள்கிழமை உயிரிழந்தாா். கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில், இவரது மனைவி விஜிலேஷ்வரி (25) அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் அனந்தகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com