மன்னாா்குடி அருகே உள்ள மூவாநல்லூா் ஊராட்சித் தலைவா் அ.பிச்சைமுத்து(72) மாரடைப்பு காரணமாக திங்கள்கிழமை (நவ.9) காலமானாா்.
இவருக்கு மனைவி தமிழ்மணி, தலையாமங்கலம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப் பிரிவு காவலராக பணியாற்றும் மாதவன் உள்பட 4 மகன்கள் உள்ளனா். பிச்சைமுத்துவின் இறுதிச் சடங்குகள் மூவாநல்லூா் பிரதான சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு 94981 64131.