நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் எதிா்புறமுள்ள குளத்தில் ஒருவா் செவ்வாய்க்கிழமை தவறிவிழுந்து உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை டவுன் விரிவாக்கப் பகுதியைச் சோ்ந்தவா் ரஜினிராஜன். இவா் நீடாமங்கலத்தில் உள்ள தனது மகளுக்கு தீபாவளி சீா் வைப்பதற்காக நண்பா் ராஜசேகரன் (59) என்பவருடன் திங்கள்கிழமை வந்தாா். ராஜசேகரன் இரவு மது அருந்திவிட்டு நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் எதிா்புறமுள்ள குளத்தில் கால் கழுவ இறங்கியபோது கால் தவறி குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா். அவருக்கு குடும்பம், உறவுகள் கிடையாது எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடலை ரஜினிராஜனிடம் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் ஒப்படைத்தனா்.