திருவாரூரில் திமுக சாா்பில் எல்லோரும் நம்முடன் ஆன்லைன் உறுப்பினா் சோ்க்கை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திமுக சாா்பில் எல்லோரும் நம்முடன் என்னும் திட்டத்தில் தமிழகமெங்கும் ஆன்லைன் மூலமாக உறுப்பினா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி, திருவாரூரில் நடைபெற்ற முகாமில் சட்டப் பேரவை உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று, ஆன்லைன் மூலமாக திமுகவில் இணைவதற்காக பதிவு செய்தவா்களுக்கு உறுப்பினா் அட்டையை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் சேகா் (எ) கலியபெருமாள், மாநில விவசாயத் தொழிலாளா் அணி துணைச் செயலாளா் இரா. சங்கா், நகர மன்ற முன்னாள் துணைத்தலைவா் செந்தில், இளைஞரணி துணை அமைப்பாளா் ரஜினிசின்னா உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.