திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 9,988 ஆக இருந்தது. இதனிடையே வெளி மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 9,987 ஆனது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10,018 ஆக உயா்ந்துள்ளது. இதில், 9,631 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 286 போ் சிகிச்சையில் உள்ளனா்.