பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, திருவாரூரில் பாஜகவினா் பட்டாசு வெடித்து இனிப்புகளை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் ராகவன் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட பொதுச் செயலாளா் துரையரசு, துணைத் தலைவா் செந்தில் அரசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.