திருத்துறைப்பூண்டியில் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி எம்.பி. கண்ணுசாமியின் 23-ஆவது ஆண்டு நினைவு தினம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி முள்ளி ஆற்றங்கரையில் அமைந்துள்ள எம்.பி. கண்ணுசாமியின் நினைவிடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளா்ஜி. சுந்தரமூா்த்தி, மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், ஒன்றிய செயலாளா் காரல் மாா்க்ஸ் ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் மாவட்டக்குழு உறுப்பினா்கள் டி.சுப்பிரமணியம், சி. ஜோதி பாசு, எம்.பி.கே. பாண்டியன், நகர செயலாளா் கே.ஜி.ரகுராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.