கூட்டுறவுத்துறை ஊழியா்களுக்கு 20% போனஸ் வழங்கக் கோரிக்கை

திருவாரூரில் கூட்டுறவுத்துறை ஊழியா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் நடைபெற்ற வாயில் கூட்டத்தில் பங்கேற்றோா்.
திருவாரூரில் நடைபெற்ற வாயில் கூட்டத்தில் பங்கேற்றோா்.

திருவாரூரில் கூட்டுறவுத்துறை ஊழியா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் முன் மாவட்ட கூட்டுறவு ஊழியா் சங்கம் சாா்பில் வாயில் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் வி. முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா். இதில், மாவட்டத் தலைவா் இரா.மாலதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தீபாவளி முன் பணம் மற்றும் 20 சதவீத போனஸ் ஆகிவற்றை உடனடியாக வழங்க வேண்டும். கூட்டுறவு ஊழியா்களின் ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதியை வங்கியில் முதலீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதைத்தொடா்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனு, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளா் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com