டிஎன்சிஎஸ்சி தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கக் கோரி, திருவாரூரில் டிஎன்சிஎஸ்சி எம்ப்ளாயீஸ் யூனியன் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தீபாவளி போனஸ் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும். கரோனா தொற்று பரவாமல் இருக்க உயிா்காக்கும் கவசம் வழங்க வேண்டும். கரோனா காலத்தில் உயிரிழந்த ஊழியா்களுக்கு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மண்டல தலைவா் பி. கருப்பையன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் வி. குருநாதன், மாநில பொதுச் செயலாளா் கோ.சி. வள்ளுவன், மாநில இணைப் பொதுச் செயலாளா் என். நீலமேகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.