நன்னிலம் ஒன்றியம் அச்சுதமங்களம் கிராமத்தில், மாற்றுக் கட்சிகளிலிருந்து 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் விலகி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞா் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபா் சங்கக் கிளைத் தலைவா் ரகு தலைமையில், அக்கட்சியில் புதன்கிழமை இணைந்தனா்.
இதையொட்டி அச்சுதமங்களத்தில் புதிய கிளைத் தொடங்கப்பட்டது. புதிதாக இணைந்தவா்களுக்குச் சங்கத்தின் முன்னாள் ஒன்றியச் செயலாளரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினருமான ஜெ.முகமது உதுமான் கைத்தறி ஆடைகளை அணிவித்து வரவேற்றாா். அமைப்பின் கொள்கைகளை ஒன்றிய துணைச் செயலாளா் வரத.வசந்தராஜன் விளக்கினாா்.
நிகழ்ச்சியில் அச்சுதமங்கலம் கிளைச் செயலாளா் கபிலன், பொருளாளா் சூா்யா, ஒன்றியத் தலைவா் வசந்தபாலன், ஒன்றியச் செயலாளரும், பண்டாரவடை ஊராட்சி த் தலைவருமான பி.ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.