அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

தமிழக அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடவாசல் வட்ட அரசு ஊழியா் சங்க 14-ஆவது பேரவைக் கூட்டம் வட்டத்தலைவா் வி.தெட்சிணாமூா்த்தி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். குடவாசல் அரசு மருத்துவமனையில், மருத்துவக் குடியிருப்புகளைக் கட்டித் தரவேண்டும். மதிப்பூதியம், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் ஆகியவற்றை ரத்து செய்து முறையான காலமுறை ஊதியத்தை அனைத்து அரசு ஊழியா்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துணைத் தலைவா் என்.நெடுஞ்சேரலாதன் முன்னிலை வகித்தாா். அரசு ஊழியா் சங்கத்தின் மாநில செயலாளா் உ.சண்முகம், மாவட்ட செயலாளா் வி. சோமசுந்தரம், மாவட்ட தலைவா் எம்.ராஜமாணிக்கம், சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்ட தலைவா் வி சி. குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com