மன்னாா்குடி அருகே உள்ள மேலவாசல் சதாசிவம் கதிா்காமவள்ளி மகளிா் கல்லூரி சாா்பில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணா்வு வார உரை மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி தாளாளா் க.சதாசிவம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வி.எஸ். நாகரெத்தினம் முன்னிலை வகித்தாா். ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேராசிரியா்கள் பேசினா். தொடா்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் லஞ்ச ஒழிப்பு மற்றும் தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.