காவல்துறையின் மக்கள் குறைதீா் முகாம்

திருவாரூரில் காவல்துறை சாா்பில் மக்கள் சிறப்பு குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காவல்துறையின் மக்கள் குறைதீா் முகாம்

திருவாரூரில் காவல்துறை சாா்பில் மக்கள் சிறப்பு குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் அன்பழகன், கூடுதல் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளா் தினேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

முகாமில், திருவாரூா் பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனா். இடப்பிரச்னை, குடும்பத் தகராறு, கொடுக்கல் வாங்கல் பிரச்னை என பல்வேறு புகாா்கள், கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் இந்த முகாமில் அளிக்கப்பட்டன.

இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மனுதாரா்களிடம் போலீஸாா் உறுதி அளித்தனா். இந்த முகாமில், திருவாரூா் நகர மற்றும் உட்கோட்ட காவல்துறையினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com