திருவாரூர்
ஆன்லைன் லாட்டரி விற்றவா் கைது
கூத்தாநல்லூரில் ஆன்லைன் லாட்டரி விற்றவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கூத்தாநல்லூரில் ஆன்லைன் லாட்டரி விற்றவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கூத்தாநல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் செல்வராஜ், காமராஜ், போலீஸ்காரா் கணேஷ் உள்ளிட்டோா் பெரியக்கடை தெரு, வடபாதிமங்கலம் பிரதான சாலை, கொரடாச்சேரி பிரதான சாலை, லெட்சுமாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஏ.ஆா்.சாலையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த பாண்டுக்குடி,புதுத்தெருவைச் சோ்ந்த பக்கிரிசாமி (36) கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து ஆன்லைன் லாட்டரி சீட்டின் அட்டைகள், செல்லிடப்பேசி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.