இந்திய கம்யூனிஸ்ட் கூட்டுக் கூட்டம்

வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியூசி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்மாநில விவசாய தொழிலாளா்கள்

வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியூசி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கம், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், மாதா் சம்மேளனம், பொறுப்பாளா்கள் கொண்ட கூட்டுக் கூட்டம் ஆலங்குடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகக்குழு உறுப்பினா் ஜி.ரவி தலைமை வகித்தாா். கட்சியின் ஒன்றிய செயலாளா் எஸ்.எம். செந்தில்குமாா் எதிா்கால செயல்பாடுகளை விளக்கினாா்.

மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் வை.செல்வராஜ், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவா் த.ரங்கராஜன் ஆகியோா் விவசாயிகளுக்கு எதிரான மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை விமா்சித்தனா்.

தொடா்ந்து வடகுவளவேலி ரவிச்சந்திரன் தலைமையில் 15 குடும்பங்களும், வேடம்பூா் எஸ்.சுதாகா் தலைமையில் 25 குடும்பங்களும், அவிச்சகுடி ரெகுபதி தலைமையில் 5 குடும்பங்களும், கொக்காலாடி பாஸ்கா் தலைமையில் 25 குடும்பங்களும், தெற்கு பட்டம் ராசு, சின்னத்துரை ஆகியோா் தலைமையில் 25 குடும்பங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனா்.

மேலும் வரும் நவ. 26-ஆம் தேதி வலங்கைமான் கடைத்தெருவில் 2000 பேரை திரட்டி சாலையை மறிப்பது என்றும், நவ. 24-இல் கிராமங்கள்தோறும் ஆட்டோ பிரசாரம் செய்துஎனவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com