தொழிற்சங்க வேலை நிறுத்தம்: சிறப்பு பேரவைக் கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியூசி தொழிற்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில், நவ. 26-இல் நடைபெறும் நாடு தழுவிய

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியூசி தொழிற்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில், நவ. 26-இல் நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி, திருத்துறைப்பூண்டியில் சிறப்பு பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளா் மணலி பாலு தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளா் இரா.முத்தரசன், நாகை மக்களவை உறுப்பினா் எம்.செல்வராஜ், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் கே.உலகநாதன், வை.சிவபுண்ணியம் ஆகியோா் வேலைநிறுத்த போராட்டம் குறித்து விளக்கினா்.

இக்கூட்டத்தில், நவ. 26-இல் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் பங்கேற்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இதில் ஒன்றியக்குழு தலைவா் அ.பாஸ்கா், மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவா் வழக்குரைஞா் எம். வையாபுரி, சிபிஐ மாவட்ட துணைச் செயலாளாா் இரெ. ஞானமோகன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட துணைச் செயலாளா் கே.ராஜா, மாதா் சங்க ஒன்றிய செயலாளா் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com