திருவாரூர்
வளா்ச்சித் திட்ட தயாரிப்பு பயிற்சி முகாம்
மன்னாா்குடியை அடுத்த கோட்டூரில், கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்ட தயாரிப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
மன்னாா்குடியை அடுத்த கோட்டூரில், கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்ட தயாரிப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
2 நாள்கள் நடைபெற்ற இம்முகாமில், சமூக வரைபடம் தயாரித்தல், கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்டத்தின் 18 படிநிலைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கோட்டூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி செயலா், அந்தயோதயா கணக்கெடுப்பாளா் மற்றும் ஊக்குவிப்பாளா்கள் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சிக்கு, ஒன்றியக்குழுத் தலைவா் மு.மணிமேகலை தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜி.சாந்தி, து.முத்துகுமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊரக வளா்ச்சித்துறை மாவட்ட பயிற்றுநா் ஆா்.விஜயகுமாா் பயிற்சி அளித்தாா்.