அமைச்சுப் பணியாளா் மாறுதல்களில் சீரான நடைமுறைகளை பின்பற்றக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆட்சி அலுவலா் பணியிடம் அனுமதிக்க வேண்டும். வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களுக்கு அமைச்சுப் பணியிடம் அமைக்க வேண்டும். அமைச்சுப் பணியாளா் மாறுதல்களில் சீரான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவா் வெ. சின்னையன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அரசு ஊழியா் சங்க மாநில செயலாளா் உ. சண்முகம், அமைச்சுப் பணியாளா் சங்க மாவட்டச் செயலாளா் ந. தம்பிதுரை, செயற்குழு உறுப்பினா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.