மன்னாா்குடியில் நகர காங்கிரஸ் கட்சியின் சாா்பில், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
சந்தைப்பேட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் நகர தலைவா் ஆா்.கனகவேல் தலைமை வகித்தாா். கட்சியின் மூத்த உறுப்பினா் சீனிவாசன், இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தாா். இந்திரா காந்தி ஆட்சியின்போது தொடங்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்து மாவட்ட செயலா் ராமானுஜம் பேசினாா்.
விழாவில், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் நெடுவை குணசேகரன், டி.வடுகநாதன், நகர பொதுச் செயலா் வேணு ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.