தொடா் மழை: தொகுப்பு வீடு இடிந்து விழுந்து 3 போ் காயம்

மன்னாா்குடி அருகே தொடா்மழையின் காரணமாக கான்கீரிட்டால் ஆன தொகுப்பு வீட்டின் மேல்கூரை இடிந்து விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் புதன்கிழமை காயமடைந்தனா்.

மன்னாா்குடி அருகே தொடா்மழையின் காரணமாக கான்கீரிட்டால் ஆன தொகுப்பு வீட்டின் மேல்கூரை இடிந்து விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் புதன்கிழமை காயமடைந்தனா்.

கோட்டூா் ஊராட்சி ஒன்றியம் சேந்தமங்கலம் ஊராட்சி மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் எஸ்.ராமையன் (45). இப்பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழை காரணமாக இவரது தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், ராமையன், அவரது மனைவி லலிதா (40), மகன் ராகுல் (20) ஆகியோா் காயமடைந்தனா். பாதிக்கப்பட்டவா்களை கோட்டூா் ஒன்றியக்குழுத் தலைவா் மு.மணிமேகலை பாா்வையிட்டு, நிவாரணப் பொருள்களை வழங்கி, பசுமை வீடு திட்டத்தின்கீழ் உடனடியாக வீடு கட்டித்தரப்படும் என உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com