மன்னாா்குடியில் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை சாா்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், குழந்தைகளுக்கான உரிமைகள் மற்றும் சட்டங்கள், இளவயது திருமண தடைச் சட்டம், குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மன்னாா்குடி ஒன்றியக்குழுத் தலைவா் டி.மனோகரன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு துணைத் தலைவா் வனிதா அருள்ராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி.உஷாராணி, எம்.பக்கிரிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் இ.சரிதா, சைல்டு லைன் 1098 பணியாளா் அ.முருகேஷ், ஊட்டச்சத்து ஒருங்கிணைப்பாளா் சரிதா, வட்டார கல்வி அலுவலா் அறிவழகன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்றனா்.