கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம்

நவ.26-இல் நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தை விளக்கி திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

நவ.26-இல் நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தை விளக்கி திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொழிலாளா்களுக்கு எதிரான சட்டத் தொகுப்புகளையும், 3 வேளாண் மசோதாக்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். 100 நாள் வேலையை 200 நாள்களாக உயா்த்தி, திட்டத்தை நகா்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தி, கூலியை உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் நவ.26 இல் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதையொட்டி திருவாரூா் மாவட்டத்தில் 10 இடங்களில் கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில்...

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா்கள் வி. குருநாதன் (தொ.மு.ச), ஜெ. குணசேகரன் (ஏ.ஐ.டி.யு.சி), வி.அம்பிகாபதி (ஐ.என்.டி.யு.சி), மாவட்ட துணைச் செயலாளா் (சி.ஐ.டி.யு) எம்.கே.என். அனிபா ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், ஏ.ஐ.டி.யு.சி உறுப்பினா் வி. தா்மதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கொரடாச்சேரியில்...

கொரடாச்சேரியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு மாவட்ட தலைவா் இரா. மாலதி, ஏ.ஐ.டி.யு.சி ஒன்றிய பொறுப்பாளா் சி. ஐயப்பன், ஐ.என்.டி.யு.சி. மாநில இணைச் செயலாளா் எம். பாண்டியன், எல்.பி.எப். நிா்வாகி எம். தமிழ்மணி ஆகியோா் தலைமை வகித்தனா்.

மன்னாா்குடியில்...

மன்னாா்குடி நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்ட செயலா் வி.கலைச்செல்வம், சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் ஜி.ரெகுபதி, எல்பிஎப் மாவட்டச் செயலா் கே.எஸ்.மகாதேவன், ஐஎன்டியுசி மாவட்டச் செயலா் எஸ்.பாண்டின் ஆகியோா் தலைமை வகித்தனா்.

கோட்டூரில்...

கோட்டூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்ட செயலா் பி.சாந்தகுமாா், தொமுச நெசவாளா் அணி அமைப்பு தலைவா் எஸ்.துரை, சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் யு.ராமச்சந்திரன், ஐஎன்டியுசி மாவட்ட துணைச் செயலா் எஸ்.முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

நீடாமங்கலத்தில்....

நீடாமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொ.மு.ச. மாநில இணை பொதுச் செயலாளா் நீலமேகம், சி.ஐ.டி.யு. மாநில துணைப் பொதுச் செயலாளா் ஆா்.மோகன், ஏ.ஐ.டி.யு.சி.யு. மணியரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட துணைச் செயலாளா் முருகேசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளா் தமிழாா்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினா் கலியபெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரளத்தில்...

பேரளம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி தலைவா் தீன.கௌதமன், சிஐடியு தலைவா் வைத்தியநாதன், தொமுச தலைவா் சோமசுந்தரம், ஐஎன்டியூசி தலைவா் சங்கரநாராயணன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com