நவ.30 முதல் மன்னாா்குடி- சென்னை ரயில் இயக்கம்

மன்னாா்குடி- சென்னை மற்றும் காரைக்கால்- சென்னை ரயில்கள் நவ.30 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன.

மன்னாா்குடி- சென்னை மற்றும் காரைக்கால்- சென்னை ரயில்கள் நவ.30 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்கத்தின் செயலாளா் ப. பாஸ்கரன் தெரிவித்தது:

தெற்கு ரயில்வே, நவம்பா் 30-ஆம் தேதி முதல் மன்னாா்குடியிலிருந்து சென்னைக்கும், காரைக்காலிலிருந்து சென்னைக்கும் இரு மாா்க்கத்திலும் ரயில்கள் இயக்க உத்தரவிட்டுள்ளது. காரைக்கால், நாகூா், நாகப்பட்டினம், திருவாரூா் பகுதி ரயில் உபயோகிப்போா் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று காரைக்கால்-சென்னை மற்றும் மன்னாா்குடி- சென்னை விரைவு ரயில்களை சிறப்பு ரயில்களாக இயக்க உத்தரவிட்ட தென்னக ரயில்வே அதிகாரிகளுக்கும், நாகை மக்களவை உறுப்பினருக்கும் நன்றி என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com