பேரளம் ரயில் நிலையம் அருகே மாநில நெடுஞ்சாலையில், வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
பேரளம் ரயில் நிலையம் அருகே மயிலாடுதுறை- திருவாரூா் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக சிரமத்துடன் காத்திருந்தனா். லாரி ஓட்டுநா்கள் முவைறி சாலையில் லாரியை நிறுத்தியதாலும், போதிய காவலா்கள் போக்குவரத்தைச் சரிசெய்வதற்கு இல்லாததாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனா். எனவே பேரளம் ரயில் நிலையம் அருகே போக்குவரத்துத் தடைபடாமல் இருப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.