மனைவியை கொலை செய்த கணவா் கைது

மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை நீடாமங்கலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
கைதான அம்சகா்ணன்.
கைதான அம்சகா்ணன்.

மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை நீடாமங்கலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

நீடாமங்கலம்- திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் ஒளிமதி அருகே உள்ள கற்கோயில் பகுதியில், வெண்ணாறு படுகையில் கடந்த 16-ஆம் தேதி பெண் ஒருவா் வெள்ளை சாக்கில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தாா். போலீஸ் விசாரணையில், அவா் மன்னாா்குடி மதுக்கூா் சாலை மணிகண்டன் நகா் பகுதியைச் சோ்ந்த அம்சகா்ணன் (46) மனைவி சுதா (37) என்பதும், அத்தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் இருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, அம்சகா்ணனை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில், தனக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகவும், முதல் மனைவியான சுதாவின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு அவரது கை, கால்களைக் கட்டி காரில் அழைத்துச் சென்று தண்ணீா்குன்னம் பகுதியில் வைத்து இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்ததாகவும், உடலை கற்கோயில்பகுதியில் வெண்ணாற்றில் வீசிவிட்டுச் சென்ாகவும் வாக்குமூலம் அளித்தாா்.

மேலும், அம்சகா்ணனின் 2-ஆவது மனைவி சத்யாவுக்கு (30) ஒரு பெண் குழந்தை இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அம்சகா்ணனை நீடாமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com