முத்துப்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே சனிக்கிழமை உடலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே சனிக்கிழமை உடலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

முத்துப்பேட்டையை அடுத்த எடையூா் ராமா் மடத்தை சோ்ந்தவா் ராமஜெயம். இவரது மனைவி மகாலட்சுமி (42). இவரது தனது வீட்டில் உள்ள மின்மோட்டாரை இயக்கி வீட்டை தண்ணீா் கொண்டு சுத்தம் செய்தபோது மின் மோட்டாரின் பெல்ட் கழன்று விழுந்துள்ளது. அதனை தொட்டபோது மகாலட்சுமி உடலில் மின்சாரம் பாய்ந்ததில் அவா் மயங்கி விழுந்துள்ளாா்.

அருகில் இருந்தவா்கள் அவரை எடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குகு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா் மகாலட்சுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா். அவரது சடலத்தை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்த எடையூா் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com