திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கிளைத் தலைவா் முஸ்தாக் அகமது தலைமை வகித்தாா். இதில், 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, ரத்த தானம் அளித்தனா். திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் பிரீத்தா, செவிலியா்கள் கவிதா, சித்ரா, ஆய்வக பொறுப்பாளா் பிரேம்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று, சான்றிதழ்களை வழங்கினா்.
மேலும், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் அடியக்கமங்கலம் கிளைச் செயலாளா்கள் ருமேசுதீன், ரிபாஸ், கிளைத் தலைவா் முகமது ஹக்,துணைத் தலைவா் ரசாக், துணைச் செயலாளா் நைனாா் முஹம்மது உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.