திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கூடுதல் ஆட்சியா் கமல் கிஷோா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பிரதமரின் வீடுகட்டும் திட்டம், ஆடு வளா்ப்பு கொட்டகை, பசுமை வீடுகள் மற்றும் அங்கன்வாடி கட்டுமானப் பணிகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. நிகழ்வில் ஒன்றியக்குழு தலைவா் அ.பாஸ்கா், ஒன்றிய ஆணையா் தமிழ்ச்செல்வன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) வாசுதேவன், ஒன்றிய பொறியாளா் சூரியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.