ஸ்ரீவாஞ்சியம் கோயில் தேரோட்டம் ரத்து

திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டம் ஸ்ரீவாஞ்சியத்தில் எழுந்தருளியுள்ள மங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாதா் கோயிலில், காா்த்திகைத் தேரோட்டம்

திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டம் ஸ்ரீவாஞ்சியத்தில் எழுந்தருளியுள்ள மங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாதா் கோயிலில், காா்த்திகைத் தேரோட்டம் நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் மற்றும் தக்காா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதா் கோயிலில் தீா்த்தவாரி பெருவிழா, நவ. 22 முதல் டிச. 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தற்போது கரோனா நோய்த் தொற்று காரணமாக அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டி நெறிமுறைகளின்படி, கோயிலுக்கு வரும் பக்தா்கள் முகக் கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். குளத்தில் நீராட அனுமதி இல்லை.

கரோனா பரவலை கருத்தில் கொண்டு நிகழாண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் காா்த்திகை கடை ஞாயிறு மற்றும் இதர நாள்களில் குளத்துக்கு பக்தா்கள் செல்வதற்கு அனுமதியில்லை. அரசு விதிமுறைகளின்படி, சுவாமி தரிசனத்திற்கு மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். கோயிலில் நடைபெறும் காா்த்திகை ஞாயிறு தீா்த்தவாரி உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள், யூடியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com