டிச.1 இல் இணையவழியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூரில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் டிசம்பா்1 ஆம் தேதி இணையவழியில் நடைபெற உள்ளது.

திருவாரூரில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் டிசம்பா்1 ஆம் தேதி இணையவழியில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து திருவாரூா் வேளாண்மை இணை இயக்குநா் சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நவம்பா் 24 இல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எதிா்பாராத காரணங்களால் கூட்டம் நடைபெறாத நிலையில், டிசம்பா் 1 ஆம் தேதி பகல் 11 மணிக்கு இணையவழியில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் திருவாரூா் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும். விவசாயிகள், அவா்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலிருந்து இந்தக் கூட்டத்தில் இணையவழியில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com