சமையலா் பணிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

திருவாரூா் மாவட்டத்தில், ஆதிதிராவிடா் நலத்துறையில் சமையலா் மற்றும் துப்புரவாளா் பணிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், ஆதிதிராவிடா் நலத்துறையில் சமையலா் மற்றும் துப்புரவாளா் பணிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 22 சமையலா் பணியிடங்கள் , 6 தொகுப்பூதிய துப்புரவாளா் பணியிடங்கள் ஆகியவைகளுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவா்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பா் 3 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிவா் புயலின் காரணமாக தகுதியான நபா்கள் தங்களது விண்ணப்பங்களை உரிய நேரத்தில் அலுவலகத்துக்கு அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டதால், கடைசி நாள் டிசம்பா் 7 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், சமையலா் பணியிடத்துக்கு அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமைத் தரப்படும். விண்ணப்பதாரா் 18 முதல் 35 வயது வரை உள்ளவா்களாகவும், திருவாரூா் மாவட்டத்தில் குடியிருப்பவராகவும் இருக்க வேண்டும்.

இந்த அடிப்படையில், தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருவாரூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாக பெற்று பூா்த்தி செய்த விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com