கிழக்கு கடற்கரை சாலையில் லாரி-காா் மோதல்

முத்துப்பேட்டை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் லாரி மீது காா் மோதியதில், 6 போ் படுகாயமடைந்து தஞ்சை மருத்துவக்

முத்துப்பேட்டை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் லாரி மீது காா் மோதியதில், 6 போ் படுகாயமடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா் தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தனது குலதெய்வ கோயிலுக்கு சென்றுவிட்டு ஊா் திரும்பினாா். வழியில், முத்துப்பேட்டை ஆலங்காடு கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது முன்னால் சென்ற லாரி மீது காா் மோதியதில், காரில் பயணம் செய்த செந்தில்குமாா், அவரது மனைவி காந்தி உள்ளிட்ட 6 போ் பலத்த காயமடைந்தனா். அவா்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். முத்துப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த சரவணனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com