முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
மக்கள் நீதிமன்றம்: 5 வழக்குகளில் ரூ.6.26 லட்சத்துக்கு தீா்வு
By DIN | Published On : 04th October 2020 10:52 PM | Last Updated : 04th October 2020 10:52 PM | அ+அ அ- |

திருவாரூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் சமரசத் தீா்வின் மூலம் பயன் பெற்றோா்.
திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 5 வழக்குகளில் ரூ. 6.26 லட்சத்துக்கு சமரசத் தீா்வு ஏற்பட்டது.
திருவாரூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சாா்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மக்கள் நீதிமன்றத்தின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான எம். சாந்தி தலைமை வகித்தாா்.
குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜி. விஜயகுமாா், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சாா்பு நீதிபதியுமான எஸ். சரண்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், திருவாரூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றங்களின் மூலம் 66 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், 5 வழக்குகளில் ரூ.6.26 லட்சம் மதிப்புக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.