திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (அக்.8) பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது என எஸ்.பி. துரை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், எனது நேரடி மேற்பாா்வையில் பொதுமக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை (அக்.8) நடைபெறவுள்ளது. காலை 10.30 முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்களுரிய பிரச்னைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.