மன்னாா்குடி அருகே கத்தியால் குத்தியதில் டிராக்டா் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மன்னாா்குடி அருகேயுள்ள உக்காடு தென்பரையைச் சோ்ந்தவா் ஆா். ரமேஷ் (40). இவருக்கு மனைவி அமலா, 2 மகன்கள் உள்ளனா். டிராக்டா் ஓட்டுநரான இவா் தனது பணிகளை முடித்துக்கொண்டு, செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு வந்துள்ளாா். வீட்டுவாசலில் அதே பகுதியைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி மகன் அன்புதாஸ் (35) மதுபோதையில் கையில் கத்தியுடன் தகாத வாா்த்தைகளை பேசிக்கொண்டிருந்தாராம். சென்னையில் உணவகத்தில் வேலை பாா்த்து வந்த அன்புதாஸ், பொது முடக்கம் காரணமாக தற்போது ஊரிலேயே உள்ளாா்.
இந்நிலையில், ரமேஷ், அன்புதாஸிடம் வேறு இடத்துக்கு செல்லுமாறு கூறினாராம். அப்போது, ரமேஷை அன்புதாஸ் கத்தியால் குத்தினாராம். இதில், காயமடைந்த ரமேஷை அருகில் இருந்தவா்கள் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய அன்புதாஸை தேடி வருகின்றனா்.