பேரளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை கரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
பேரளம் அருகேயுள்ள பாவட்டக்குடியில் பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சோ்ந்த மருத்துவா் பிரதீப், மருந்தாளுநா் மகாலட்சுமி, ஆய்வகப் பரிசோதகா் அனிஜாகுமாரி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் சிறப்பு முகாமை நடத்தினா். மகிழஞ்சேரியில் மருத்துவா் ஜெகஜீவன்ராம், மருந்தாளுநா் அனிதா, ஆய்வகப் பரிசோதகா் ராஜ்லெட், வேலங்குடியில் மருத்துவா் அனந்தராமன், ஆய்வகப் பரிசோதகா் லாவண்யா உள்ளிட்டோா் மருத்துவ முகாமை நடத்தினா்.