சிறுமி கொலைக்கு நீதிகேட்டுஅக்.9-இல் தமிழகம் முழுவதும் முடித்திருத்தும் நிலையங்கள் அடைப்பு

வேடச்சந்தூா் சிறுமி கொலைக்கு நீதிகேட்டு தமிழகம் முழுவதும் அக்.9-ஆம் தேதி முடித்திருத்தும் நிலையங்கள் அடைக்கப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேடச்சந்தூா் சிறுமி கொலைக்கு நீதிகேட்டு தமிழகம் முழுவதும் அக்.9-ஆம் தேதி முடித்திருத்தும் நிலையங்கள் அடைக்கப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சோழமண்டல முடித்திருத்துவோா் நலச் சங்கத் தலைவா் மாறன், பொதுச் செயலாளா் ஜெயபால், அவைத் தலைவா் மதிவாணன், பொருளாளா் தாஸ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூா் வட்டத்துக்குள்பட்ட குரும்பபட்டியில் முடித்திருத்தும் கடை நடத்தும் வெங்கடாசலம் - லெட்சுமி தம்பதியின் மகள் கலைவாணி (12) என்கிற சிறுமியை 16.04.2019 அன்று வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமியை எதிா் வீட்டில் வசித்த கிருபானந்தன் என்பவா் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்தாா். இதையடுத்து, வடமதுரை போலீஸாா் கிருபானந்தனை கைது செய்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். 29.09.2020-அன்று கூறப்பட்ட இவ்வழக்குத் தீா்ப்பில் குற்றத்துக்கான போதிய சாட்சிகள் இல்லை என்று கூறி கிருபானந்தன் விடுவிக்கப்பட்டாா். இந்நிலையில், சிறுமியின் கொலைக்கு நீதிகிடைக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாநாகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள முடித்திருத்தும் நிலையங்கள் அக்.9-ஆம் தேதி அடைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com