திருவாரூரில் 103 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் 103 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் 103 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 7,842-ஆக இருந்தது. வெளிமாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 7,840 ஆனது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, புதிதாக 103 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,943 ஆக உயா்ந்துள்ளது. மேலும், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 165 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதுவரை, 6,999 போ் வீடு திரும்பிய நிலையில் 870 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com